- இந்திய விழாக்கள், பண்டிகைகள்
- நடிகர்கள், நடிகைகள்
- ஆன்மீக தலைவர்கள்
- இசையமைப்பாளர்கள்
- எழுத்தாளர்கள்
- சமூக சீர்திருத்தவாதிகள்
- சமூக சேவகர்கள்
- சுதந்திர போராட்ட வீரர்கள்
- தொழிலதிபர்கள்
- நாட்டிய கலைஞர்கள்
- விஞ்ஞானிகள்
- விளையாட்டு வீரர்கள்
Search on ItsTamil
சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.
இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.
பிறப்பு: ஜனவரி 12, 1863
பிறந்த இடம்: கல்கத்தா, இந்தியா
இறப்பு: ஜூலை 4, 1902
தொழில்: தத்துவவாதி, துறவி
நாட்டுரிமை: இந்தியா
சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.
குழந்தைப் பருவமும், ஆரம்பகாலக் கல்வியும்
ஒரு குழந்தையாக சுவாமி விவேகானந்தர் அவர்கள், மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருந்தார். இவர் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்சி மேற்கொண்டு பயின்றார். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழக்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார். ஒரு குழந்தையாக இருந்த போதே, சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு துறவிகள் மீது பெரும் மரியாதை இருந்தது. யார், எதை அவரிடம் கேட்டால், கேட்டவுடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, தியாகம் மற்றும் முடிதுறக்கும் உணர்வு இருந்தது எனலாம்.
உயர்கல்வியும், ஆன்மீக ஈடுபாடும்
சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கிய தத்துவங்களையும், தருக்கவியலையும், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார். அவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனைகளின் பீடம் அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக்கிய மத இயக்கமான ‘பிரம்ம சமாஜில்’ இணைய செய்தது. ஆனால், பிரம்ம சமாஜின் பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும் கடவுளை உணர்த்தாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.
இந்த நேரத்தில், தஷினேஸ்வர் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர்’ பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்தார் என்றும் கூறினார். ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது நண்பர்களுடன் அவரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார். அவர் ராமகிருஷ்ணரிடம், “கடவுள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், “ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்றார். இது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. அவர் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார். இதுவே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சென்று சந்திக்கக் காரணமாக அமைந்தது.
ராமகிருஷ்ணர் மீது அவர் கொண்ட பற்று
எதையும் முற்றிலும் ஏற்குமுன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம், சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு இருந்தது. ஆகவே, எந்த ஒரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணரர் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொள்ள அவரால் இயலவில்லை. அப்போது அவருக்கு ராமகிருஷ்ணரர் அவர்கள் உரைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். இதனை நினைவில் கொண்ட விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நோட்டை மறைத்து வைத்தார். வெளியில் சென்ற ராமகிருஷ்ணர் அவர்கள், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அவர் ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார். பின்னர், இச்செயல் சுவாமி விவேகனந்தருடையது என்பதையும் அறிந்தார், ராமகிருஷ்ணர் அவர்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார். அதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார். ராமகிருஷ்ணரர் அவர்களது மரணத்திற்குப் பின், சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ணரரின் ஒரு சில முக்கிய சீடர்களும் துறவறம் பூண்டுவது என்று சபதம் எடுத்து, பரனகோர் என்ற இடத்தில் பேய்கள் நடமாடுவதாகக் கருதப்படும் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.
இந்தியாவில் அவரது பயணம்
1890 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஒரு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணத்தில் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றார். அவரது இந்தபி பயணத்தின் போது அவர், வாரணாசி, அயோத்தி, ஆக்ரா, விருந்தாவன், ஆழ்வார் போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, அவரது இயற்பெயரான ‘நரேந்திரா’ மறைந்து ‘சுவாமி விவேகானந்தர்’ என்று பெயர் பெற்றார். நல்லது மற்றும் கேட்டது என்று பகுத்தறியும் அவரது திறனுக்காக, மகாராஜா கேத்ரி என்பவர், இவருக்கு ‘விவேகானந்தர்’ என்று பெயரிட்டார் என்று பலரும் கூறுகின்றனர். அவரது இந்தப் பயணத்தின் போது, விவேகானந்தர் அவர்கள், மன்னரின் அரண்மனைகளிலும், ஏழைகளின் குடிசைகளிலும் தங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் பல வகையான மக்களிடம் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. விவேகானந்தர் அவர்கள், சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி கொடுங்கோன்மையை கவனித்தார். இந்தியா ஒரு உயிருள்ள தேசமாக ஆக்கப்படவேண்டும் என்றால், ஒரு தேசிய புத்துயிர்ப்புத் தேவை என்று உணர்ந்தார்.
சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். அவர் அமர்ந்து தியானம் செய்த அந்தப் பாறையே, விவேகானந்தர் அவர்களின் நினைவாக பிரபலமாகவும், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகத் திகழும் ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்றும் உள்ளது.
மேலைநாடுகளில் விவேகானந்தரின் சொற்பொழிவுகள்
1893ல், சுவாமி விவேகானந்தர் அவர்கள், சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். மேடையில் அவரது உரையின் தொடங்குவதற்கு முன், “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் காட்டு கரவொலி பெற்றார். ஸ்வாமிஜி அவரது பிரமாதமான பேச்சுத்திறன் மூலமாக அமெரிக்காவிலுள்ள அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் வரலாறு, சமூகவியல், தத்துவம் அல்லது இலக்கியம் போன்ற எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும், தன்னிச்சையாக எளிதாகப் பேசினார். அவர், இந்தியாவில் கிறிஸ்துவ மதபிரச்சாரகர்கள் ஏவிவிடும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களை வெறுத்தார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், இங்கிலாந்துக்கும் சென்றார். பல மக்கள் அவரது சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், ‘மார்கரெட் நிவேதிதா’. பின்னர், அவர் இந்தியா வந்து குடியேறினர்.
ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடம்
மேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், 1897ல் இந்தியா திரும்பினார். இந்தியர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார். ‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று அவர் உணர்ந்தார். இந்த குறிக்கோளை அடைய, சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார். மீண்டும், அவர் ஜனவரி 1899 முதல் டிசம்பர்1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.
1863: கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் பிறந்தார்.
1879: கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.
1880: கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.
1886: ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்களின் மறைவுக்குப் பின், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார்.
1890: இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணம்.
1892: கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார்.
1893: சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார்.
1897: இந்தியா திரும்பினார்
1897: “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1899: ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிருவவதற்காக கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார்.
1899 – 1900: ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
1902: கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.
Recent Posts
ஹரிவன்ஷ் ராய் பச்சன்
பி. பி. ஸ்ரீனிவாஸ்
மனோஜ் குமார்
திருபாய் அம்பானி
Related Posts
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
சத்திய சாய் பாபா
சீரடி சாயி பாபா
கௌதம புத்தர்
தயானந்த சரஸ்வதி
பாபா ராம்தேவ்
உயர்ந்த மனிதர் அவரிடம் கற்றுக்கொள்ள அவரை பின்பற்ற நிறைய உள்ளது. முடிந்தவரை அவரை பின்பற்றுவோம். நன்றி
Swamyin last seedan naan
i love you, i like you sir,
உள்ளதை உள்ள படி(உண்மை) உரைத்தால் உலகமே உன் பெயர் உரைக்கும்.வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு தேர்வு ஆனால் முடிவு தெரியும் முன்பே வாழ்க்கையே முடிந்து விடுகிறது. முடிவு தெரிய வேண்டுமா? உண்மையாக இருந்தால் போதும் நீங்கள் ஜெயிப்பது உறுதி.உன்னை பிறர் புகழ்வதும் இகழ்வதும் உன் கையில்.
Everyone should know about vivekananda’s life history and achievements completely,
swami vivekananda a great person i like the words in india all of them are brothers and sisters…………….. so i followed this thought…………..
it is really very good information which is useful to everyone. thanks.
IVARAI PINPATTRUVOM
- இன்றைய ராசி பலன்
- வார பலன் | Vara rasi palangal
- மாத பலன் | Matha rasi palan
- குரு பெயர்ச்சி பலன்கள்
- சனி பெயர்ச்சி பலன்கள்
- ராகு கேது பெயர்ச்சி
- ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval
- தமிழ் கதைகள் | Tamil stories for reading
- சுவாரஸ்ய தகவல்கள்
- கடவுளின் அற்புதங்கள்
- சமையல் குறிப்புகள்
விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனான இவர் வேதாந்த தத்துவங்களை உலகிற்கு தெரியப்படுத்தியவர். தனது இளம் வயதிலேயே அனைத்து விடயங்ளையும் ஆராய்ந்து அறிந்து முன்னோக்கு சிந்தனையுடன் செயல்பட்ட இந்த சுவாமி விவேகானந்தரை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம். அவரை பற்றிய முழு வரலாற்றினை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தெளிவாக படியுங்கள்.
விவேகானந்தர் பிறப்பு :
சுவாமி விவேகானந்தர் கல்கத்தாவில் விசுவநாத் தத்தா மற்றும் புவனேஷ்வரி தேவி என்று தம்பதியினருக்கு 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் நரேந்திரநாத் தத்தா. காலப்போக்கில் இறையுணர்வின் மீது இருந்த ஈடுபாட்டால் அவரது பெயரினை விவேகானந்தர் என்று மாற்றிக்கொண்டார்.
இயற்பெயர் – நரேந்திரநாத் தத்தா பிறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜனவரி 12, 1863 பெற்றோர் – விசுவநாத் தத்தா, புவனேஷ்வரி தேவி பிறந்த ஊர் – கல்கத்தா, மேற்குவங்காளம் மருவிய பெயர் – விவேகானந்தர்
படிப்பு மற்றும் கல்வி : தனது தொடக்க கல்வியினை அவர் பயிலும் போது அவர் மிகச்சிறந்த நினைவாற்றலோடு இருந்துள்ளார். மேலும் இசை மற்றும் இசைக்கருவிகள் மேல் அவருக்கு இருந்த ஈடுபாட்டால் அவர் அதனை முறைப்படி கற்றார். சிறுவயதிலிருந்து அவருக்கு தியானத்தின் மீது அதிக நாட்டம் இருந்தது. எனவே அவர் தியானத்தினை தொடர்ந்து செய்துவந்தார்.
தனது பள்ளிப்படிப்பினை முடித்த விவேகானந்தர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அந்த சமயத்தில் அனைத்து மேற்கத்திய தத்துவங்களையும் அவர் முழுவதுமாக படித்தார். மேலும் மேற்கத்திய காலாச்சாரியம் மற்றும் அவர்களுடைய வரலாறு ஆகியவற்றினையும் முழுமையாக அறிந்துகொண்டார்.
ராமகிருஷ்ண பரமஹம்சருடன் விவேகானந்தர் : கல்லூரியில் தத்துவ படிப்பினை தேர்ந்தெடுத்து படித்ததனால் அவருக்கு அனைத்து விடயங்களில் மீதும் சந்தேகம் வந்தது குறிப்பாக ஆன்மிகம், கடவுள் மற்றும் கடவுள் வழிபடு போன்ற விடயங்களில் அவருக்கு ஒரு தெளிவில்லா நிலை உண்டானது. மேலும் எதனையும் ஆராய்ந்த பின்னர் அதில் உண்மை இருந்தால் மட்டுமே அதனை நம்பும் பழக்கத்தினை கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் தான் காளி கோவிலில் பூசாரியாக இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சருடன் அவருக்கு சந்திப்பு ஏற்பட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளை நேரில் பார்த்தவர் என்று விவேகானந்தரின் நண்பர்கள் அவரிடம் கூற அதுபற்றி முழு விடயத்தினையும் தெரிந்து கொள்ள முதன்முறையாக ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்திக்க விவேகானந்தர் சென்றார்.
விவேகானந்தர் பரமஹம்சரிடம் கடவுளை நீங்கள் நேரில் கண்டுளீர்களா? என்று தனது கேள்வியினை அவரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த பரமஹம்சர் நான் உன்னை பார்ப்பதை விட தெளிவாக கடவுளை பார்த்துள்ளேன் என்று கூறினார். அதனை விவேகானந்தர் நம்ப வில்லை பிறகு ஒரு சோதனையை செய்த விவேகானந்தர் அதன் பின் ராமகிருஷ்ண பரமஹம்சரை நம்ப தொடங்கினார்.
சீடன் விவேகானந்தர் : பரமஹம்சரை முழுவதும் நம்ப தொடங்கிய பின்னர் விவேகானந்தர் அவருடைய சீடராக மாறினார். ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுள் வழிபாட்டினை உருவ வடிவமாகவும் மற்றும் அறுவை வடிவமாகவும் போதிக்காமல் உணர்ச்சி வடிவமாக போதித்தார். இதன் காரணமாக கடவுள் பக்தி மற்றும் ஞான மார்க்கம் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டார்.
துறவியான விவேகானந்தர் : விவேகானந்தர் தனது குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்ததும் விவேகானந்தர் மற்றும் சில முதன்மை சீடர்களும் துறவிகளாக மாறினார் . துறவியாக மாறிய இவர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் சென்று அங்கு தங்களது ஞான அறிவினை விசாலப்படுத்தி கொண்டனர். அப்போது இந்திய மக்களின் நிலையினை பற்றி விவேகானந்தர் நன்கு புரிந்துகொண்டார்.
நாடு முழுவதும் வெவ்வேறு மக்களை சந்தித்து அவர்களை பற்றி தெரிந்து கொண்ட விவேகானந்தர் மக்கள் ஆங்கிலேயே அரசிடம் அடிமைப்பட்டு இருப்பதனை நினைத்து வருந்தினார். மேலும் அவர் அதற்கு அடுத்து நடத்திய சொற்பொழிவுகள் மக்களின் முன்னேற்றத்திற்கான சொற்பொழிவுகளாகவே இருந்தது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் : இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் அவர் தங்கி சில காலம் தியானம் செய்தார். கடல் நடுவே ஒரு பாறையின் மீது அமர்ந்து அவர் தியானம் செய்தார். அந்த இடத்தில் அவரது நியாபகமாக விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டது . இன்றளவும் அது மக்களின் பார்வைக்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிகாகோ உலக மாநாட்டில் சொற்பொழிவு : அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 1893ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற விவேகானந்தர் அவர் ஆற்றிய உரையின் மதிப்பினை உணர்ந்த பலர் அவருக்கு சீடர்களாக மாறினார். மேலும் 4 ஆண்டுகள் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருந்த அவர் உலகம் முழுவதும் விவேகானந்தா மிஷன் மற்றும் விவேகானந்தா மடம் என்று நிறுவி தனது கருத்துக்களை போதித்து வருகிறார்.
இந்தியாவில் விவேகானந்தா மடம் மற்றும் மிஷன் : பல நாடுகளில் தனது ஆன்மீக பயணத்தினை மேற்கொண்ட விவேகானந்தர் மீண்டும் இந்தியா வந்து நாடு முழுவதும் தனது மடங்களின் மூலம் சொற்பொபிழிவு மற்றும் தனது விலைமதிப்பில்லா கருத்துக்களை கூறி மக்களின் வாழ்வு மேம்பாட்டு இருக்க தனது உதவினை மக்களுக்கு புரிந்தார்.
விவேகானந்தர் இறப்பு : இந்தியாவிலும் தனது மடங்களை நிறுவிய அவர் தனது சொந்த ஊரான கல்கத்தாவில் பேலூர் எனும் இடத்தில் தனது மடத்தினை நிறுவினார். பிறகு அவர் 1902ஆம் ஆண்டு ஜூலை 4 நாள் இறந்தார்.
விவேகானந்தர் இறப்பு குறித்த மர்மங்கள்: சுவாமி விவேகானந்தரின் இறப்பு குறித்த எண்ணற்ற கருத்துக்கள் இணையத்தில் பரவி வருவதை நன்மால் பார்க்க முடிகிறது. அவர் கான்செர் நோயால் பாதிக்க பட்டு இணைந்தார், காமத்தை அடக்கியதால் இறந்தார், ஆஸ்துமா மற்றும் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இப்படி ஆளுக்கு ஒருவர் ஒரு கதையை பரப்பி விடுகிறார்கள். ஆனால் அவர் உண்மையில் எப்படி இறந்தார் என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
1863 ஆண்டு கல்கத்தாவில் பிறந்த விவேகானந்தர், சரியாக தனது 39 வயதில், 1902 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி இறக்கிறார். இறக்கும் சமயத்தில் விவேகானந்தருக்கு ஆஸ்துமா சக்கரை போன்ற நோய்கள் இருந்ததாகவும் ஆனால் அவரின் உயிரை பறிக்கும் அளவிற்கு அந்நோய்களின் வீரியம் இல்லை என்றும் அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக ஞாயணிகள், யோகிகள் பின்றோர் தங்களது இறப்பை முன்கூட்டியே அறிவித்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதே போல தான் சுவாமி விவேகானதரும் தனது இறப்பு குறித்த தகவளை தான் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பே சுவாமி ராமகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவரார சுவாமி அபேனந்தாவிடம் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுவாமி அபேதானந்தா நீங்கள் இறப்பு குறித்தெல்லாம் இப்போது நினைக்கவே கூடாது. அதற்கான வயதும் இதுவல்ல என்று கூறியுள்ளார். உடனே விவேகாந்தர் கூறியுள்ளார், நாளுக்கு நாள் என்னுடைய ஆன்மா பெரியதாகிக்கொண்டே போகிறது. ஒருகட்டத்திற்கு மேல் என்னுடைய ஆன்மா இந்த உடலில் இருப்பது கடினம். ஆகையால் நான் இன்னும் சில வருடங்களிலேயே இறந்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.
அவர் இறந்த அந்த நாளில், எப்போதும் போல அவர் காலையில் எழுந்து, பேலூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று தியானம் செய்த்துள்ளார். அதன் பிறகு மாலை 7 மணி அளவில் தன்னுடைய அறைக்குள் சென்ற அவர், தன்னை யாரும் தொந்தரவு செய்யாதபடி பார்த்துக்கொள்ளுமாறு தன்னுடைய சீடர்களிடம் கூறியுள்ளார். அதன் பிறகு ஆழ்ந்த தியானத்திற்கு சென்ற அவர், இரவு 9 மணி அளவில் தன்னுடைய உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் உச்சந்தலையில் உள்ள சஹஸ்ரார சக்கரத்தை உடைத்து தன்னுடைய உயிரை தானே வெளியேற்றி முக்தி அடைந்துள்ளார்.
பழங்காலத்தில் யோகிகள் தங்களின் உயிரை தியானம் மூலம் வெளியேற்றுவர் என்று கூறப்பட்டிருந்தாலும், அதை நிகழ்காலத்தில் சாதித்து காட்டியவர் விவேகானந்தரே. அவரின் இறப்பிற்கு பிறகு அவருடைய உடலை ஆய்வு செய்த மருத்துவர்கள், அவரின் மூளை நரம்புகள் வெடித்து அவர் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு சாதாரண மனிதனால் தன்னுடைய மூளை நரம்புகளை தானே வெடிக்க செய்ய இயலாது என்றும், கடுமையான தியானத்தை மேற்கொள்ளும் ஒருவரால் மட்டுமே சஹஸ்ரார சக்கரத்தை உடைத்து இது போன்ற செயல்களை செய்ய இயலும் என்றும் விவேகாடநதரின் சீடர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் மிக சிறந்த ஞாயணிகளில் ஒருவரான விவேகானந்தரின் இறப்பு இப்படி தன் இருந்ததே தவிர, அவர் நோயினால் பாதிக்கப்பட்டோ அல்லது காமத்தை காட்டுபுதியதாலோ இருக்கவில்லை என்பதே உண்மை.
English Overview: Here we have Swami Vivekananda biography in Tamil. Swami Vivekananda is a great Rishi who lived in India. Above we have Swami Vivekananda history in Tamil. We can also say it as Swami Vivekananda varalaru in Tamil or Swami Vivekanandar essay in Tamil or Swami Vivekanandar Katturai in Tamil.
வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்
RELATED ARTICLES MORE FROM AUTHOR
டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு | Dr Radhakrishnan history in Tamil
கரிகால சோழன் வரலாறு | Karikala cholan history in Tamil
அன்னை தெரசா வரலாறு | Annai Therasa history in Tamil
சமூக வலைத்தளம்.
- UK & Europe
- United States
- Meet Sadhguru
- Sadhguru Radio
- Sadhguru Quotes
- Youth N Truth
- Beginner's Programs
- Free Yoga & Guided meditation
- Inner Engineering
- Isha Health Solutions
- See all beginner programs
- Advanced Programs
- Bhava Spandana
- Shoonya Meditation
- Additional Programs
- Sadhanapada
- Sacred Walks
- See all additional programs
- Children's Programs
- Become a Teacher
- Monthly Events
- Free Yoga Day
- Pancha Bhuta Kriya
- Online Satsang
- Annual Events
- Lunar/Hindu New Year
- Guru Purnima
- Mahashivratri
- International Yoga Day
- Mahalaya Amavasya
- Special Events
- Ishanga 7% - Partnership with Sadhguru
- Yantra Ceremony With Sadhguru
- Sadhguru Sannidhi Sangha
- Pancha Bhuta Kriya Online With Sadhguru on Mahashivratri
- Ecstasy of Enlightenment with Sadhguru
- Sadhguru in Chennai
Main Centers
- Isha Yoga Center
- Sadhguru Sannidhi Bengaluru
- Sadhguru Sannidhi, Chattarpur
- Isha Institute of Inner-sciences
- Isha Yoga Center LA, California, USA
- Local Centers
International Centers
- Consecrated Spaces
- Adiyogi - The Source of Yoga
- Adiyogi Alayam
- Dhyanalinga
- Linga Bhairavi
- Spanda Hall
- Theerthakunds
- Adiyogi - The Abode of Yoga
- Mahima Hall
- Online Medical Consultation
- In-Person Medical Consultation
- Ayurvedic Therapies
- Other Therapies
- Residential Programs
- Diabetes Management Program
- Joint and Musculoskeletal Disorders Program
- Sunetra Eye Care
- Ayur Sampoorna
- Ayur Rasayana Intensive
- Ayur Rasayana
- Pancha Karma
- Yoga Chikitsa
- Ayur Sanjeevini
- Non-Residential Programs
- Obesity Treatment Program
- ADHD/Autism Clinic
- Cancer Clinic
- Conscious Planet
சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையிலிருந்து 7 அற்புத நிகழ்வுகள்
சுவாமி விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சில கதைகளை சத்குரு நம்முடன் இங்கு பகிர்ந்துகொள்கிறார், அவை ஆன்மீகத் தேடுதல் உள்ளவர்களுக்கு உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்.
1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி கொல்கத்தாவில் விஸ்வநாத் தத்தா மற்றும் புவனேஸ்வரி தேவிக்கு மகனாக நரேந்திர நாத் தத்தாவாகப் பிறந்தார் சுவாமி விவேகானந்தர். ஜூலை 4, 1902 ல் அவர் பேலூர் மடத்தில் சென்றபோது, அவர் ஒரு புரட்சியைத் தொடங்கினார், அது இன்னும் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இன்று, அவரது குருவின் செய்திக்கான வாகனமாக, அவர் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்து வருகிறார்.
இந்தக் கட்டுரையில், சத்குரு, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்களைப் பகிர்ந்துகொள்கிறார், அது அவருடைய குருவுடனான அவரது உறவையும் அவர் எடுத்துச் சென்ற செய்தியையும் விளக்குகிறது.
1. சுவாமி விவேகானந்தர் மற்றும் காளி (Swami Vivekananda and Kali)
ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உலகிற்கு தன் செய்தியை எடுத்துச் செல்வதற்கான ஒரு வழியாகக் கருதியதால், அவர் மீது மிகவும் வித்தியாசமான பற்று இருந்தது. ராமகிருஷ்ணர் தன்னால் அதைச் செய்ய முடியாததால் விவேகானந்தரை ஒரு வாகனமாகப் பார்த்தார்.
ராமகிருஷ்ணருக்கு, விவேகானந்தர் மீது ஏன் இவ்வளவு பைத்தியம் என்று அவரைச் சுற்றியுள்ள மக்களுக்கு புரியவில்லை. விவேகானந்தர் ஒருநாள் அவரைப் பார்க்க வரவில்லை என்றாலும், ராமகிருஷ்ணர் அவரைத் தேடிச் செல்வார், ஏனென்றால் இந்த பையனுக்கு, அனைவரிடத்திலும் எளிதில் பகிர்ந்துகொள்ள தேவையான உணர்வு இருக்கிறது என்று அவருக்குத் தெரியும். ராமகிருஷ்ண பரமஹம்சர் மீதும் விவேகானந்தருக்கு அதே சமமான பைத்தியம் இருந்தது. அவர் எந்த வேலையையும் தேடவில்லை, அவர் தனது வயதுடையவர்கள் பொதுவாக செய்ய வேண்டிய எதையும் செய்யவில்லை. அவர் எப்போதும் ராமகிருஷ்ணரைப் பின்பற்றியே இருந்தார்.
விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு அற்புதமான சம்பவம் உண்டு. ஒருநாள், அவரது தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருந்தார். அப்போது திடீரென்று விவேகானந்தருக்கு தன் கைகளில் பணம் இல்லாததும், தாயாருக்குத் தேவையான மருந்தையோ உணவையோ வழங்க முடியவில்லை என்பதும் மனதில் தோன்றியது. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரை கவனித்துக்கொள்ள முடியவில்லை என்பது அவருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. விவேகானந்தரைப் போன்ற ஒரு மனிதன் கோபப்பட்டால், அவன் உண்மையில் கோபத்தின் உச்சத்தில் உள்ளான் என்பதாகும். ராமகிருஷ்ணரிடம் போனான் – கோபம் வந்தாலும் போக வேறு எங்கும் இல்லை, அங்கேதான் போனான்.
அவர் ராமகிருஷ்ணரிடம் “இதெல்லாம் முட்டாள்தனம், இந்த ஆன்மீகம் , இது என்னை எங்கே கொண்டு செல்கிறது? நான் வேலையில் இருந்திருந்தால், நான் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்திருந்தால், இன்று என் அம்மாவை நான் கவனித்துக் கொண்டிருக்கலாம். நான் அவளுக்கு உணவு கொடுத்திருக்கலாம், மருந்து கொடுத்திருக்கலாம், அவளுக்கு ஆறுதல் கொடுத்திருக்கலாம். இந்த ஆன்மீகம் என்னை எங்கே கொண்டு சென்றது?"
ராமகிருஷ்ணர் காளியை வழிபடுபவர் என்பதால், அவரது வீட்டில் காளி சந்நிதி இருந்தது. அவர் “உன் அம்மாவுக்கு மருந்தும் உணவும் தேவையா? ஏன் அம்மாவிடம் போய் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கக்கூடாது?" விவேகானந்தருக்கு இது ஒரு நல்ல யோசனையாகத் தோன்றியது, அவர் சந்நிதிக்குள் சென்றார்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தார். ராமகிருஷ்ணர், "அம்மாவிடம் சாப்பாடு, பணம் மற்றும் உங்கள் அம்மாவுக்குத் தேவையானதைக் கேட்டாயா?" என்றார்.
அதற்கு விவேகானந்தர், "இல்லை, மறந்துவிட்டேன்" என்றார்.
“மீண்டும் உள்ளே சென்று கேள்” என்றார் ராமகிருஷ்ணர்.
விவேகானந்தர் மீண்டும் சந்நிதிக்குள் சென்று நான்கு மணி நேரம் கழித்து திரும்பி வந்தார். ராமகிருஷ்ணர் அவரிடம், "அம்மாவிடம் கேட்டாயா?"
ராமகிருஷ்ணர் மீண்டும் கூறினார். "மறுபடியும் உள்ளே போ இந்த முறை, மறக்காமல் கேள்."
விவேகானந்தர் உள்ளே சென்று எட்டு மணி நேரம் கழித்து வெளியே வந்தார். ராமகிருஷ்ணர் மீண்டும் அவரிடம், "அம்மாவிடம் கேட்டாயா?"
விவேகானந்தர், “இல்லை, நான் கேட்கமாட்டேன். நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை."
அதற்கு ராமகிருஷ்ணர், “நல்லது. நீ இன்று சந்நிதியில் ஏதாவது கேட்டிருந்தால், இதுவே உனக்கும் எனக்கும் இடையிலான கடைசி நாளாக இருந்திருக்கும். நான் உன் முகத்தை மீண்டும் பார்த்திருக்க மாட்டேன், ஏனென்றால் கேட்கும் முட்டாளுக்கு வாழ்க்கை என்னவென்று தெரியாது. கேட்கும் முட்டாளுக்கு வாழ்க்கையின் அடிப்படைகள் புரிவதில்லை."
பிரார்த்தனை என்பது ஒரு குறிப்பிட்ட குணம். நீங்கள் பக்தி செய்தால், நீங்கள் வணங்கும் நிலைக்கு உயர்ந்தால், அது ஒரு அற்புதமான வழி. ஆனால் உங்களுக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நீங்கள் பிரார்த்தனை செய்தால், அது உங்களுக்கு வேலை செய்யப் போவதில்லை.
2. கடவுளின் ஆதாரம் (The Proof of God)
அவருக்கு 19 வயதாக இருந்தபோது, விவேகானந்தர் மிகவும் தர்க்கரீதியான, அறிவார்ந்த சிறுவனாக, அனைத்திலும் தீயாய் இருந்தார். எல்லாவற்றிற்கும் சரியான பதில்களை அவர் விரும்பினார். அவர் ராமகிருஷ்ணரிடம் வந்து கேட்டார், “நீங்கள் எப்போதும் கடவுள், கடவுள் என்று பேசுகிறீர்கள். ஆதாரம் எங்கே? ஆதாரத்தைக் காட்டுங்கள்!” ராமகிருஷ்ணர் மிகவும் எளிமையானவர். அவர் படித்தவர் அல்ல. அவர் ஒரு ஆன்மீகவாதி, அறிஞர் அல்ல. அதனால், "நான்தான் ஆதாரம்" என்றார்.
"கடவுள் இருக்கிறார் என்பதற்கு நானே ஆதாரம்" என்றார் ராமகிருஷ்ணர்.
விவேகானந்தருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஏனென்றால் இது முற்றிலும் அபத்தம். அவர் ஒரு சிறந்த அறிவார்ந்த விளக்கத்தை எதிர்பார்த்தார் - "கடவுளின் ஆதாரம் விதை முளைப்பது மற்றும் கிரகம் சுழல்வது." ஆனால் ராமகிருஷ்ணர், “கடவுள் இருக்கிறார் என்பதற்கு நானே ஆதாரம்” என்றார். “நான் இருக்கும் விதம்தான் ஆதாரம்” என்று ராமகிருஷ்ணர் சொல்லிக்கொண்டிருந்தார். விவேகானந்தருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் திரும்பி வந்து, "சரி, நீங்கள் எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா?" என்றார். “பார்க்கும் தைரியம் உனக்கு இருக்கிறதா?” என்று ராமகிருஷ்ணர் கேட்டார். துணிச்சலான சிறுவன், "ஆம்" என்று சொன்னான், ஏனெனில் இது அவனை வேதனைப்படுத்தியது. எனவே ராமகிருஷ்ணர் விவேகானந்தரின் மார்பில் தனது கால்களை வைத்தார், விவேகானந்தர் ஒரு குறிப்பிட்ட சமாதிநிலைக்கு சென்றார், அங்கு அவர் மனதின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டு இருந்தார். ஏறக்குறைய 12 மணிநேரம் அவர் அதிலிருந்து வெளியே வரவில்லை. அதற்குப் பிறகு அவர் வாழ்க்கையில் வேறொரு கேள்வியைக் கேட்டதில்லை.
3. விவேகானந்தர் சாரதாவின் ஆசியைப் பெறுகிறார் (Vivekananda Gets Sharada’s Blessings)
நீங்கள் ஒரு பக்தராக இல்லாதவரை, வாழ்க்கை உங்களுக்காக திறக்கக்கூடாது, ஏனென்றால் அது உங்களுக்காக திறந்தால், உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் சேதம் மட்டுமே ஏற்படும். இந்தியாவில், பக்தி இல்லாத ஒருவரிடம் ஞானம் ஒருபோதும் ஒப்படைக்கப்படவில்லை.
விவேகானந்தரின் வாழ்க்கையில் ஒரு அழகான சம்பவம் உண்டு. ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்த பிறகு, விவேகானந்தர் இளைஞர்களைக் கூட்டி, இந்தியா முழுவதும் பயணம் செய்து, தேசத்தைக் கட்டமைக்கவும், நாட்டின் முகத்தை மாற்றவும் முயன்றார். அப்போது அவரிடம் ஒருவர், அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் மதங்களின் பாராளுமன்றம் நடப்பதாக கூறினார். இங்கு யாரும் அவரைக் கேட்காததால் அங்கு செல்லுமாறு பரிந்துரைத்தனர். யாருமே இல்லை! ஒரு இளைஞன் இடம் விட்டு இடம் ஓடி, வேதத்தில் எழுதப்படாத பெரிய விஷயங்களைப் பற்றி பேச முயல்கிறான் - யார் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்? அவர்கள், “நீ போய் அவர்களை அங்கே அசை. நீங்கள் அவர்களை அங்கே அசைத்தால், இங்குள்ள அனைவரும் உங்களைக் கவனிப்பார்கள்.
அவர் மேற்கத்திய நாடுகளுக்கு செல்லவிருந்தபோது - ராமகிருஷ்ணரின் செய்தியை எடுத்துச் செல்ல முதன்முறையாக அமெரிக்காவிற்கு செல்கிறார் - அப்போது அவர் ராமகிருஷ்ணரின் மனைவி சாரதாவிடம் ஆசி பெறச் சென்றார்.
அவர் வரும்போது அம்மையார் சமையல் செய்துகொண்டிருந்தார்கள். சாரதா ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். இந்தியப் பெண்கள், குறிப்பாக அவர்கள் சமைக்கும்போது, பாடுவது மிகவும் பொதுவானது. பலர் இப்போது ‘ஐ-பேட்’ ல் (iPad) விளையாடுவதால் அது இனி இல்லை, ஆனால் இதற்கு முன்பு, நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய காரியங்களில் ஒன்று, மிகுந்த அன்புடன் நன்றாக சமைத்து மக்களுக்கு பரிமாறுவதுதான். ஒருவர் நன்றாக சாப்பிடுவதைப் பக்கத்தில் இருந்து பார்ப்பது அவர்களுக்கு மிகப் பெரிய திருப்தியாக இருந்தது. சமையல் மிகவும் மகிழ்ச்சியான, விரிவான செயல்முறையாக இருந்தது. 20-30 நிமிட உணவுக்காக, அவர்கள் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு மணிநேரம் செலவழிப்பார்கள், அவர்கள் எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார்கள். குறைந்தபட்சம் என் அம்மா எல்லா நேரத்திலும் பாடிக்கொண்டிருந்தார்.
அவர் வந்து, “எனது குருவின் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல நான் அமெரிக்கா செல்ல விரும்புகிறேன்” என்று சொன்னபோது அவள் பதிலளிக்கவில்லை. உடனே அவள், “நரேன், அந்தக் கத்தியை என்னிடம் கொடு” என்றாள். விவேகானந்தர் அவரிடம் கத்தியை கொடுக்கும்போது, ஒரு குறிப்பிட்ட வழியில் கொடுத்தார். அப்போது சாரதா, “நீ போகலாம், உனக்கு என்னுடைய எல்லா ஆசீர்வாதங்களும் உண்டு” என்றாள். அப்போது அவர், “ஏன் இவ்வளவு நேரம் காத்திருந்தீர்கள், முதலில் கத்தியை ஏன் கேட்டீர்கள்? நீங்கள் தான் காய்கறிகளை வெட்டி முடித்துவிட்டீர்களே" என்று கேட்டார். அவள் சொன்னாள், “சுவாமி போன பிறகு நீ என்னவாக இருக்கிறாய் என்று பார்க்க விரும்பினேன். இப்போது, நீ எனக்கு கத்தியைக் கொடுத்த விதம், நீ செல்லத் தகுதியானவன், சுவாமியின் செய்தியை எடுத்துச் செல்ல நீ தகுதியானவன் என்பதைக் காட்டுகிறது.
4. சுவாமி விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ணரின் செய்தி (Swami Vivekananda and Ramakrishna’s Message)
பெரும்பாலான குருமார்கள் தாங்களாகவே பிரபலமடைய முடியாது என்பதை நீங்கள் எப்போதும் காணலாம். செய்தியை எடுத்துச் செல்ல அவர்களுக்கு ஒரு நல்ல சீடர் தேவை, ஏனெனில் குருவே உலகின் பல வழிகளிலும் மிகவும் வல்லவராக இருக்க முடியாது. இன்று அனைவரும் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றி பேசுகிறார்கள். ராமகிருஷ்ணர் மிகவும் கூர்மையான உணர்வுடன் இருந்தார். ஒரு அதிசய மனிதர். ஆனால் அதே நேரத்தில், உலக அளவில், அவர் முற்றிலும் படிக்காதவர். விவேகானந்தர் வராமல் இருந்திருந்தால், அவர் தொலைந்துபோன, மறந்த மலராக இருந்திருப்பார். எத்தனையோ பூக்கள் பூக்கின்றன, ஆனால் அவற்றில் எத்தனை அங்கீகரிக்கப்படுகின்றன?
5. பிரார்த்தனைப் பற்றி சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda on Prayer)
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை கூறினார், "எந்தவொரு பிரார்த்தனையையும் விட கால்பந்தை உதைப்பது உங்களை தெய்வீகத்திற்கு நெருக்கமாக அழைத்துச் செல்லும்". இது உண்மைதான், ஏனென்றால் நீங்கள் முழுமையாக ஈடுபடாதவரை நீங்கள் கால்பந்து விளையாட முடியாது. இதில் தனிப்பட்ட நோக்கம் எதுவும் இல்லை, ஈடுபாடு மட்டுமே. உங்களால் என்ன செய்ய முடியும் மற்றும் செய்ய முடியாது என்பது ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், நீங்கள் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்றுள்ளீர்கள். இப்போது இது ஈடுபாடு பற்றிய ஒரு கேள்வி மட்டுமே, எந்த நோக்கமும் இல்லை.
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை கூறினார், "எந்தவொரு பிரார்த்தனையையும் விட கால்பந்தை உதைப்பது உங்களை தெய்வீகத்திற்கு நெருக்கமாக அழைத்துச் செல்லும்."
பிரார்த்தனையில், சிறிது நேரம் கழித்து, நீங்கள் பல காரியங்களைச் செய்யும்போதே நீங்கள் பிரார்த்தனை செய்யலாம் - நீங்கள் விரும்பியதைச் செய்யலாம். இந்தியாவில், அவர்கள் பிரார்த்தனைகளை மிகவும் சிக்கலானதாக ஆக்கினர் - வெறும் வாய்மொழியாக அல்ல, நீங்கள் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும், ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த "பிரார்த்தனையைச் சொல்லும்" வணிகத்தை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். மக்கள் என்ன செய்வார்கள் என்பது அவர்களுக்கு தெரியும், அதனால் அவர்கள் பிரார்த்தனையை மிகவும் சிக்கலானதாக ஆக்கினர், நீங்கள் நினைவில் வைத்து சரியாக செயல்பட வேண்டும், இல்லையெனில் அது அவச்செயல். அந்த அளவு சிக்கலானதாக இருக்கும்போது, நீங்கள் பிரார்த்தனையின் போது வேறு ஏதாவது செய்ய முடியாது. எனவே அந்த வகையில் ஒரு கால்பந்து விளையாட்டு உங்களை ஈடுபாட்டின் நிலைக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு நீங்கள் வேறு எதையும் செய்ய முடியாது. வேறு எதையாவது செய்வது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது, ஏனென்றால் உங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது, இதில் அதிக ஈடுபாடு உள்ளது. ஒரு கால்பந்து விளையாட்டில், உங்கள் கால்களை ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் ‘ஸ்கால்பெல்’ (ஒருவிதமான கத்தி) போல பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட அளவிலான ஈடுபாட்டைக் கோரும் விளையாட்டாகும், ஏனெனில் நீங்கள் பந்தைக் கையாளும் கைகளும், முழு வேகத்தில் உங்களைக் கொண்டு செல்லும் கால்களும் ஒரே மாதிரியானவை, மேலும் நீங்கள் விளையாடும்போது, நீங்கள் செய்யும் அனைத்து முயற்சியையும் தடுக்க, தங்களால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்யும் அந்த பத்து நபர்களைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் மக்களை ஏமாற்ற வேண்டும், நீங்கள் பந்தை எடுக்க வேண்டும், நீங்கள் முழு வேகத்தில் ஓட வேண்டும்; உங்கள் கால்கள் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் ஸ்கால்பெல் போல் திறமையானதாக இருக்க வேண்டும், ஏனெனில் அந்த வேகத்தில், அந்தச் செயலில், பந்தை இயக்குவதற்கு அபாரமான திறன் தேவைப்படுகிறது. இது நீங்கள் ஏறக்குறைய மனதளவைக் கடந்து இருக்கும் நிலையில் உள்ள, ஒரு குறிப்பிட்ட அளவிலான ஈடுபாட்டைக் குறிக்கும்.
முழு ஈடுபாட்டுடன் நீங்கள் எதையாவது செய்தால், அங்கே செயல் மட்டுமே இருக்கும் என்பதை நீங்கள் பார்க்கலாம் - மனம் வேறு எங்கோ உள்ளது. எனவே ஒரு கால்பந்து விளையாட்டில், வீரர்கள் அந்த வகையான நிலையை அடிக்கடி அடைகிறார்கள், ஏனெனில் அது ஒரே ஒரு விஷயத்தில் உள்ளது. தீவிரமாக ஒரு விஷயம் விளையாடப்படும் போது, பாதி உலகையே ஆட்கொண்டதற்கு அதுவே காரணம். ஒரு குறிப்பிட்ட வகையான ஆழ்நிலை உள்ளது - அது உண்மையில் ஆன்மீகம் கடந்து செல்லுதல் அல்ல, ஆனால் ஒருவருடைய வரம்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு குறிப்பிட்ட போக்கு மற்ற அனைவருக்கும் தீயாய் பரவுகிறது.
6. பெண்கள் பற்றி சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda on Women)
ஒருமுறை, ஒரு குறிப்பிட்ட சமூக சீர்திருத்தவாதி விவேகானந்தரிடம் சென்று, “நீங்களும் பெண்களை ஆதரிப்பது பெரிய விஷயம், நான் என்ன செய்வது? நான் அவர்களைச் சீர்திருத்த விரும்புகிறேன்" என்று கேட்டார். இதை ஆதரிக்க விரும்புகிறேன். அப்போது விவேகானந்தர், “விட்டுவிடுங்கள், அவர்களைப் பற்றி நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை; அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்வார்கள்" என்றார். இதுதான் தேவை. ஒரு ஆண், பெண்ணைச் சீர்திருத்த வேண்டும் என்பதல்ல. இடம் கொடுத்தால், அவளே தேவையானதைச் செய்வாள்.
7. தொலைநோக்குப் பார்வை குறித்து சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda’s Vision)
எனக்குப் பன்னிரெண்டு அல்லது பதினைந்து வயது இருக்கும்போது, சுவாமி விவேகானந்தர், "உண்மையான அர்ப்பணிப்புள்ள நூறு பேரை எனக்குக் கொடுங்கள், நான் இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றுவேன்" என்று சில இலக்கியங்களில் சொன்னதைப் பார்க்க நேர்ந்தது. அந்த நேரத்தில் இந்த நாட்டில் இருபத்திமூன்று கோடி மக்கள் இருந்ததாகத் தெரிகிறது, ஆனால் உண்மையிலேயே அர்ப்பணிப்புள்ள நூறு பேரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அப்போது நினைத்தேன், “என்ன ஒரு சோகம்! விவேகானந்தர் போன்ற ஒரு மனிதர் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. அவர் போன்ற மனிதர் தினமும் தோன்றுவதில்லை. அவர் வரும்போது, இந்தப் பரந்த நாட்டில் நூறு பேரைக்கூட கொடுக்க முடியவில்லை". இந்தக் கலாச்சாரத்திற்கும் இந்த நாட்டிற்கும் இது ஒரு பெரிய சோகமாக எனக்குத் தோன்றியது.
ஒருவருக்கு அபாரமான தொலைநோக்குப் பார்வை இருந்தது, மேலும் அதனால் பல விஷயங்கள் நடந்துள்ளன. இன்றும் அவர் பெயரில், மனித நல்வாழ்வுக்காக நிறைய நடக்கிறது. அவருடைய தொலைநோக்குப் பார்வையால் நிறைய நடந்திருக்கிறது. அந்தக் காலத்தில் அவருடன் வாழ்ந்த மற்றவர்கள், எங்கே? ஆனால் அவரது தொலைநோக்குப் பார்வை இன்னும் ஏதோ ஒரு வகையில் செயல்படுகிறது. அதனால் நிறைய நல்வாழ்வு கிடைத்துள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் இதே தொலைநோக்குப் பார்வை கொண்டு சென்றிருந்தால், இன்னும் சிறப்பாக நடந்திருக்கும். ஒரு கௌதம புத்தருக்கோ அல்லது ஒரு விவேகானந்தருக்கோ மட்டும் தொலைநோக்குப் பார்வை இருந்தால் போதாது. மக்கள்தொகையில் ஒரு பெரிய பிரிவினருக்கு இப்படியொரு தீர்க்கமான பார்வை இருந்தால் மட்டுமே, சமூகத்தில் உண்மையில் அழகான விஷயங்கள் நடக்கும்.
ஆசிரியரின் குறிப்பு: பொதுவாக மனிதனாகக் கருதப்படும் வரம்புகளை உடைத்த மூன்று மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளைப் பின்பற்றவும். புரூஸ்லீ, சுவாமி விவேகானந்தர் மற்றும் அவரது யோகா ஆசிரியரைப் பற்றி சத்குரு பேசுவதைப் பாருங்கள். சத்குரு எக்ஸ்க்ளூசிவ்-ல் மட்டுமே! இப்போது சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
Related Tags
- Kindle Store
- Kindle eBooks
- Literature & Fiction
Promotions apply when you purchase
These promotions will be applied to this item:
Some promotions may be combined; others are not eligible to be combined with other offers. For details, please see the Terms & Conditions associated with these promotions.
Buy for others
Buying and sending kindle ebooks to others.
- Select quantity
- Buy and send Kindle eBooks
- Recipients can read on any device
These ebooks can only be redeemed by recipients in the India. Redemption links and eBooks cannot be resold.
Download the free Kindle app and start reading Kindle books instantly on your smartphone, tablet or computer – no Kindle device required .
Read instantly on your browser with Kindle for Web.
Using your mobile phone camera, scan the code below and download the Kindle app.
Image Unavailable
- To view this video download Flash Player
சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு - Biography in Tamil: Swami Vivekananda Chicago Speech, Quotes, Karma Yoga, Biography and Complete Works In Tamil (Tamil Edition) Kindle Edition
>சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு - biography in tamil, >swami vivekananda chicago speech, quotes, karma yoga, biography and complete works in tamil.
- Reading age 5 - 17 years
- Print length 87 pages
- Language Tamil
- Grade level 5 - 12
- Publication date 11 October 2020
- Page Flip Enabled
- Word Wise Not Enabled
- Enhanced typesetting Enabled
- See all details
- Kindle Paperwhite
- Kindle Voyage
- Kindle Oasis
- Kindle Cloud Reader
- Kindle for Android
- Kindle for Android Tablets
- Kindle for iPhone
- Kindle for iPad
Explore Our Collection Of Tamil eBooks
Customers who read this book also read.
Product details
- ASIN : B08L431J8B
- Language : Tamil
- File size : 1412 KB
- Simultaneous device usage : Unlimited
- Text-to-Speech : Not enabled
- Enhanced typesetting : Enabled
- Word Wise : Not Enabled
- Print length : 87 pages
- #263 in Mythology & Folk Tales
- #640 in Myths, Legends & Sagas
Customer reviews
- Sort reviews by Top reviews Most recent Top reviews
Top review from India
There was a problem filtering reviews right now. please try again later..
- Press Releases
- Amazon Science
- Sell on Amazon
- Sell under Amazon Accelerator
- Protect and Build Your Brand
- Amazon Global Selling
- Become an Affiliate
- Fulfilment by Amazon
- Advertise Your Products
- Amazon Pay on Merchants
- COVID-19 and Amazon
- Your Account
- Returns Centre
- 100% Purchase Protection
- Amazon App Download
- Conditions of Use & Sale
- Privacy Notice
- Interest-Based Ads
சுவாமி விவேகானந்தர் கட்டுரை | Swami Vivekananda Katturai In Tamil
Table of Contents
சுவாமி விவேகானந்தர் ஒரு புகழ்பெற்ற இந்து துறவி மற்றும் ஆன்மீக ஆசிரியர் ஆவார், இவர் இந்தியாவில் இந்து மதத்தின் மறுமலர்ச்சியிலும் அதன் போதனைகளை மேற்கு நாடுகளுக்கு பரப்புவதிலும் முக்கிய பங்கு வகித்தார். இந்திய சுதந்திர இயக்கம் மற்றும் நவீன இந்து தத்துவத்தின் வளர்ச்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இந்தக் கட்டுரையில், விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை ஆழமாக ஆராய்வோம், இந்திய மற்றும் மேற்கத்திய ஆன்மீகத்தில் இவர் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி பார்ப்போம்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு இந்தியாவில் கொல்கத்தாவில் (முன்னர் கல்கத்தா) பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா, மேலும் இவர் தனது பெற்றோருக்கு எட்டாவது குழந்தை. இவரது தந்தை ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு சீர்திருத்த இந்து அமைப்பான பிரம்ம சமாஜத்தின் முக்கிய உறுப்பினராக இருந்தார். விவேகானந்தர் சிறுவயதிலிருந்தே பிரம்ம சமாஜத்தின் போதனைகளை வெளிப்படுத்தினார் மற்றும் ஏகத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களால் பெரிதும் பாதிக்கப்பட்டார்.
இளமைப் பருவத்தில், விவேகானந்தர் தீவிர வாசிப்பாளராகவும் சிறந்த மாணவராகவும் இருந்தார். இவர் விளையாட்டில் சிறந்து விளங்கினார் மற்றும் இசை மற்றும் கவிதை மீதான இவரது விருப்பத்திற்காக அறியப்பட்டார். இவர் கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் படித்தார், அங்கு இவருக்கு மேற்கத்திய தத்துவம் மற்றும் இலக்கியம் அறிமுகப்படுத்தப்பட்டது. பண்டைய இந்து வேதங்களான வேதங்களின் போதனைகளிலும் ஆர்வம் காட்டினார்.
ஆன்மீக பயணம்
விவேகானந்தரின் ஆன்மீகப் பயணம் இளமைப் பருவத்தின் பிற்பகுதியில் இவர் தனது குருவான ஸ்ரீ ராமகிருஷ்ணரைச் சந்தித்தபோது தொடங்கியது. ராமகிருஷ்ணர் காளி தேவியின் பக்தர் மற்றும் ஆழ்ந்த ஆன்மீக உணர்வு நிலைகளை அனுபவித்தவர். இவர் விவேகானந்தரின் வழிகாட்டியாக ஆனார் மற்றும் அத்வைத வேதாந்தத்தின் கொள்கைகளை இவருக்குக் கற்றுக் கொடுத்தார், இது எல்லாவற்றின் ஒற்றுமையையும் வலியுறுத்துகிறது.
ராமகிருஷ்ணரின் வழிகாட்டுதலின் கீழ், விவேகானந்தர் ஆன்மீக மாற்றத்திற்கு உட்பட்டார். இவர் ஒரு துறவி ஆனார் மற்றும் தனது உலக சொத்துக்களை துறந்தார், ஆன்மீக அறிவைப் பின்தொடர்வதில் தன்னை அர்ப்பணித்தார். ராமகிருஷ்ணரின் மரணத்திற்குப் பிறகு, விவேகானந்தர் தனது குருவின் போதனைகளைப் பரப்புவதற்காக ராமகிருஷ்ண மடத்தையும் நிறுவினார்.
மக்களின் முன்னேற்றத்திற்கு உதவியது
துறவிகள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், மக்களின் நிலையைப் புரிந்துகொள்ளவும் இந்தியா முழுவதும் பயணம் செய்தனர். அப்போது விவேகானந்தர் மக்களின் அறியாமை மற்றும் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்ததை நினைத்து வருந்தினார். மக்களின் அறியாமையை போக்க உரைகளை ஆற்றினார். அந்தச் சொற்பொழிவு மக்களின் முன்னேற்றத்திற்குத் தூணாக அமைந்தது. கன்னியாகுமரி கடலின் நடுவே ஒரு பாறையில் அமர்ந்து தியானம் செய்தார். அந்த இடத்தில் அவரது நினைவைப் போற்றும் வகையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
போதனைகள் மற்றும் தத்துவம்
விவேகானந்தரின் போதனைகள் அத்வைத வேதாந்தத்தின் கொள்கைகளில் அடித்தளமாக இருந்தன, ஆனால் இவர் கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் பௌத்தம் உட்பட பரந்த அளவிலான ஆன்மீக மரபுகளிலிருந்தும் பெற்றார். அனைத்து மதங்களும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை என்றும், அவை அனைத்தும் உலகளாவிய உண்மையை நோக்கிச் செல்கின்றன என்றும் இவர் நம்பினார்.
விவேகானந்தரின் மையப் போதனைகளில் ஒன்று ஆன்மாவின் தெய்வீகம் பற்றிய கருத்து. ஒவ்வொரு நபருக்கும் தெய்வீகத்தின் தீப்பொறி இருப்பதாக இவர் நம்பினார், மேலும் இந்த உண்மையை உணர்ந்துகொள்வதே மனித வாழ்க்கையின் இறுதி இலக்கு என்று இவர் நம்பினார். ஆன்மீக ஞானத்தை அடைவதற்கான வழிமுறையாக தன்னலமற்ற சேவை அல்லது கர்ம யோகாவின் முக்கியத்துவத்தையும் இவர் வலியுறுத்தினார்.
விவேகானந்தர் சமூக சீர்திருத்தத்திற்கான வலுவான வக்கீலாகவும் இருந்தார். ஆன்மிகப் பயிற்சியும் சமூகச் செயல்பாடும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும், சமூகத்தின் முன்னேற்றத்தை நோக்கிச் செயல்படுவது ஆன்மீக விழிப்புணர்வின் கடமை என்றும் இவர் நம்பினார். இவர் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அயராது உழைத்தார், மேலும் இவர் சாதி அமைப்பை ஒழிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் வாதிட்டார்.
விவேகானந்தர் சீடராக
ராமகிருஷ்ணர் பரமஹம்சரைப் பற்றி கேள்விப்பட்டு, அவரது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள அவரிடம் சென்றார். பகுத்தறிவு விவேகானந்தர் உடனடியாக ராமகிருஷ்ணரை நம்பவில்லை, ஆனால் ஒரு பரிசோதனையை நடத்திய பிறகு அவர் ராமகிருஷ்ணர் மற்றும் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டார்.
சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தியைக் கண்டு, அவரை ஆசிரியராக ஏற்றுக்கொண்டார். ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு சில சீடர்களும் விவேகானந்தரும் துறவிகள் ஆனார்கள்.
மரபு மற்றும் தாக்கம்
இந்திய மற்றும் மேற்கத்திய ஆன்மீகத்தில் விவேகானந்தரின் தாக்கம் ஆழமானது. இவரது போதனைகள் புதிய தலைமுறை ஆன்மீக தேடுபவர்களுக்கு ஊக்கமளித்தன மற்றும் இந்தியாவில் இந்து மதத்தின் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தன. உலகளாவியவாதம் மற்றும் அனைத்து உயிரினங்களின் தெய்வீகத்தன்மை பற்றிய இவரது செய்தி அனைத்து மதத்தினருக்கும் எதிரொலித்தது, மேலும் இவர் கிழக்கு மற்றும் மேற்கு இடையே ஒரு பாலமாக பரவலாக கருதப்பட்டார்.
மேற்கு நாடுகளில், விவேகானந்தரின் போதனைகள் ரால்ப் வால்டோ எமர்சன் மற்றும் வில்லியம் ஜேம்ஸ் உட்பட பல முக்கிய நபர்களை பாதித்தன. புதிய சிந்தனை இயக்கத்தின் வளர்ச்சியிலும், மேலை நாடுகளில் யோகா மற்றும் தியானம் பரவுவதிலும் முக்கியப் பங்காற்றினார்.
தலாய் லாமா மற்றும் எக்கார்ட் டோலே உள்ளிட்ட பல நவீன ஆன்மீகத் தலைவர்களின் பணிகளில் விவேகானந்தரின் செல்வாக்கைக் காணலாம். இவரது போதனைகள் இன்றுவரை உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்துகின்றன.
இந்தியாவில் விவேகானந்தரின் பாரம்பரியம் குறிப்பிடத்தக்கது. இவர் இந்து மதத்தின் நவீன வரலாற்றில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார், மேலும் இவரது போதனைகள் இந்திய ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
1902 இல் விவேகானந்தரின் மரணத்திற்குப் பிறகு, இவரைப் பின்பற்றுபவர்கள் ராமகிருஷ்ணா மிஷனை நிறுவினர், இது இவரது போதனைகளைப் பரப்புவதற்கும் சமூக சேவைகளை வழங்குவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டது. இன்று, ராமகிருஷ்ணா மிஷன் இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது, மேலும் விவேகானந்தரின் உலகளாவியத்துவம் மற்றும் சேவை பற்றிய செய்தியை ஊக்குவிப்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.
விவேகானந்தரின் தாக்கத்தை இந்தியாவில் உள்ள மற்ற ஆன்மீக மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். காந்தி மற்றும் அம்பேத்கர் இருவரும் விவேகானந்தரின் போதனைகளால் ஆழமாக பாதிக்கப்பட்டனர், மேலும் அவர்கள் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான தங்கள் சொந்த வேலைகளில் இவரது பல கருத்துக்களை இணைத்தனர்.
சொற்பொழிவு
அவர் 1893 இல் சிகாகோவில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். உரையா கேட்டவர்களில் சிலர் அவருடைய சீடர்களானார்கள். அதன் பிறகு நான்கு வருடங்கள் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.
இந்தியா திரும்பி அவர் தனது மடங்களில் பிரசங்கம் செய்தார். அவருடைய சொற்பொழிவுகள் அனைத்தும் அறிவிலி மக்களை விழிப்படையச் செய்வதாகவும், இளைஞர்களுக்கு அவர்களின் ஆற்றலை உணர்த்துவதாகவும் அமைந்திருந்தன.
Swami Vivekananda Katturai In Tamil: சுவாமி விவேகானந்தர் ஒரு ஆன்மீக குருவாக இருந்தார், இவருடைய போதனைகள் உலகெங்கிலும் உள்ள மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. இவர் கிழக்கு மற்றும் மேற்கு இடையே ஒரு பாலமாக இருந்தார், மேலும் இவரது உலகளாவிய மற்றும் சேவை செய்தி இந்திய மற்றும் மேற்கத்திய ஆன்மீகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மாவின் தெய்வீகத்தன்மை, தன்னலமற்ற சேவையின் முக்கியத்துவம் மற்றும் அனைத்து மதங்களின் ஒற்றுமை பற்றிய இவரது போதனைகள் அனைத்து மதத்தினருக்கும் தொடர்ந்து எதிரொலிக்கிறது, மேலும் இவரது மரபு வரும் தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கும்.
இதையும் நீங்கள் படிக்கலாம்…
Leave a Comment Cancel reply
Save my name, email, and website in this browser for the next time I comment.
JavaScript seems to be disabled in your browser. For the best experience on our site, be sure to turn on Javascript in your browser.
- Create an Account
- E-Granthalaya
Bhagavad gita
Mahabharata
Comparative Studies
Spirituality
Special launch
Other publication
Kid section
Swami Vivekananda Sardh Shati Samaroh
Ramayana Darshnam
Ma. Eknathji Ranade
Motivational
- Children’s Books
- Health Books
- Horror Books
- Science Books
- Science Fiction
- Short Stories
- Story Books
- Tamil Kids Books
- Akila Govind
- Amuthavalli Kalyanasundaram
- Balakumaran
- B. Jeyamohan
- Jayakanthan
- Kalki Krishnamurthy
- Mythili Sampath
- Na. Parthasarathy
- Pattukkottai Prabakar
- Premalatha Balasubramaniam
- Ponniyin Selvan
- R Maheshwari
- Rajam Krishnan
- Rajesh Kumar
- Ramanichandran Novel
- Subashree Krishnaveni
- Sujatha Rangarajan
- Uma Balakumar
- Uma Maheswari Krishnaswamy
- Vaduvoor K.Duraiswamy Iyengar
- Viji Vignesh
- Yaddanapudi Sulochana Rani
- All Tamil Books
Login to your account
- Swami Vivekananda Stories Tamil PDF Book
Swami Vivekananda book was written about Swami Vivekananda. This book is a biographical book. If you want to know about Swami Vivekananda you should read this book. After reading this book you can know everything about him. Swami Vivekananda has a great personality. Everyone should read this book. It is a famous book in Tamil literature. Swami Vivekananda book has 27 pages and PDF size is 02 Mb.
Book Details:
- Book Name: Swami Vivekananda Stories
- Category: Novels
- Total pages: 27
- PDF Size: 02 Mb
Download PDF / Read Online
Similar titles
Disqus: add shortname your comunity more info
We will keep fighting for all libraries - stand with us!
Internet Archive Audio
- This Just In
- Grateful Dead
- Old Time Radio
- 78 RPMs and Cylinder Recordings
- Audio Books & Poetry
- Computers, Technology and Science
- Music, Arts & Culture
- News & Public Affairs
- Spirituality & Religion
- Radio News Archive
- Flickr Commons
- Occupy Wall Street Flickr
- NASA Images
- Solar System Collection
- Ames Research Center
- All Software
- Old School Emulation
- MS-DOS Games
- Historical Software
- Classic PC Games
- Software Library
- Kodi Archive and Support File
- Vintage Software
- CD-ROM Software
- CD-ROM Software Library
- Software Sites
- Tucows Software Library
- Shareware CD-ROMs
- Software Capsules Compilation
- CD-ROM Images
- ZX Spectrum
- DOOM Level CD
- Smithsonian Libraries
- FEDLINK (US)
- Lincoln Collection
- American Libraries
- Canadian Libraries
- Universal Library
- Project Gutenberg
- Children's Library
- Biodiversity Heritage Library
- Books by Language
- Additional Collections
- Prelinger Archives
- Democracy Now!
- Occupy Wall Street
- TV NSA Clip Library
- Animation & Cartoons
- Arts & Music
- Computers & Technology
- Cultural & Academic Films
- Ephemeral Films
- Sports Videos
- Videogame Videos
- Youth Media
Search the history of over 866 billion web pages on the Internet.
Mobile Apps
- Wayback Machine (iOS)
- Wayback Machine (Android)
Browser Extensions
Archive-it subscription.
- Explore the Collections
- Build Collections
Save Page Now
Capture a web page as it appears now for use as a trusted citation in the future.
Please enter a valid web address
- Donate Donate icon An illustration of a heart shape
Swami Vivekananda Collected Works (PDF & Audiobook)
Iframe pdf item preview, share or embed this item, flag this item for.
- Graphic Violence
- Explicit Sexual Content
- Hate Speech
- Misinformation/Disinformation
- Marketing/Phishing/Advertising
- Misleading/Inaccurate/Missing Metadata
plus-circle Add Review comment Reviews
Download options, in collections.
Uploaded by guardian_c0gitator.py on August 5, 2023
IMAGES
VIDEO
COMMENTS
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் ...
vivekananda-book-collections-in-tamil Scanner Internet Archive HTML5 Uploader 1.7.0 . plus-circle Add Review. comment. Reviews There are no reviews yet. ... DOWNLOAD OPTIONS download 1 file . PDF download. download 1 file . TORRENT download. download 5 Files download 5 Original. SHOW ALL. IN COLLECTIONS Community Texts . Uploaded by ...
சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக ...
விவேகானந்தர் நூல்கள் - Vivekanandar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com
Here we have Swami Vivekananda biography in Tamil. Swami Vivekananda is a great Rishi who lived in India. Above we have Swami Vivekananda history in Tamil. We can also say it as Swami Vivekananda varalaru in Tamil or Swami Vivekanandar essay in Tamil or Swami Vivekanandar Katturai in Tamil. வ.உ.சிதம்பரம் பிள்ளை ...
Swami Vivekananda - A Biography by Swami Nikhilananda PREFACE ... Swami Vivekananda, the great soul loved and revered in East and West alike as the rejuvenator of Hinduism in India and the preacher of its eternal truths abroad, was born at 6:33, a few minutes before sunrise, on Monday, January 12, 1863. It was the day of
Scribd is the world's largest social reading and publishing site.
Swami Vivekananda Biography in Tamil சுவாமி விவேகானந்தர் வரலாறு. ️ Birth: January 12, 1863 ️ Place of Birth ...
விவேகானந்தர் (Vivekananda in Tamil) வாழ்க்கையில் நடந்த சில அற்புதமான ...
TO THE SECOND EDITION. Since the first appearance of the book certain new findings about the life of Swami Vivekananda have been made. In the present edition the book has therefore been slightly edited and corrected accordingly. We are indebted to Amrita Salm of the Vedanta Society of Southern California for her help in this regard. 10 April 1995.
கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த ...
Vivekânanda, a biography Bookreader Item Preview ... Vivekananda, Swami, 1863-1902 Publisher New York, Ramakrishna-Vivekananda Center Collection ... Pdf_module_version 0.0.20 Ppi 360 Rcs_key 24143 Republisher_date 20221112011516 Republisher_operator [email protected]
May 31, 1893, Vivekananda set sail for America from Bombay. The ship sailed via China and Japan, and in July reached Vancouver, from where the Swami travelled to Chicago. Vivekananda gave his first lecture at the Parliament of Religions in Chicago on the inaugural day, September 11, 1893. He was an instant success at the Parliament, given his
சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு - Biography in Tamil: Swami Vivekananda Chicago Speech, Quotes ...
indebtedness to Swami Vivekananda. The Swami's mission was both national and international. A lover of mankind, he strove to promote peace and human brotherhood on the spiritual foundation of the Vedantic Oneness of existence. A mystic of the highest order, Vivekananda had a direct and intuitive experience of Reality. He derived his ideas from that
In the list of biographies of Swami Vivekananda published by us, we have one which extensively narrates his life, and also one which presents him very briefly. The present book stands midway between these extremes. Herein the readers will find his life described in a short compass, without sacrificing the essential details.
Swami Vivekananda (IAST: Svāmī Vivekānanda ; 12 January 1863 - 4 July 1902), born Narendranath Datta, was an Indian Hindu monk, philosopher, author, religious teacher, and the chief disciple of the Indian mystic Ramakrishna. He was a key figure in the introduction of Vedanta and Yoga to the Western world, and the father of modern Indian nationalism who is credited with raising interfaith ...
விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு இந்தியாவில் கொல்கத்தாவில் (முன்னர் ...
E-Books. 1 Item. Show per page. Sort By. Swami Vivekananda's Rousing Call to Hindu Nation. ₹0.00. Out of stock. 1 Item.
PDF ஆகப் பதிவிறக்கு ... Swami Vipulananda: The Monk Who Recreated Lost Ancient Tamil Musical Instruments, Aravindan Neelakandan, 27 மார்ச் 2022 ...
Vivekananda :A Biography by Swami Nikhilananda. Publication date 1953 Topics Hind Swaraj, Swarmi Vivekanada Publisher Ramakrishna-Vivekanada Center of New York Collection ... PDF download. download 1 file . SINGLE PAGE ORIGINAL JP2 TAR download. download 1 file ...
Swami Vivekananda has a great personality. Everyone should read this book. It is a famous book in Tamil literature. Swami Vivekananda book has 27 pages and PDF size is 02 Mb. Book Details: Book Name: Swami Vivekananda Stories. Category: Novels. Total pages: 27. PDF Size: 02 Mb.
Swami Vivekananda - The Complete works of Swami Vivekananda (1-9 Volumes) 1-9 (2013, Advaita Ashrama).pdf download 18.0M Vivekananda, Swami - Complete Works of Swami Vivekananda (2017, Oregan Publishing).pdf download